பிரதமர் ரணில் மற்றும் இந்திய அரசியல் தூதுக்குழுவினருக்குமிடையில் சந்திப்பு!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரசியல் முக்கியஸ்த்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
பிரதமருடனான சந்திப்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே.நவாஸ்கனி, கவிஞர் ஆளூர் சா நவாஸ் , முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், இராஜாங்க அமைச்சர்களான அலி ஸாஹிர் மௌலானா, பைஸல் காசிம் ஆகியோரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை இந்திய நட்புறவு , மீனவர் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









-ஊடகப் பிரிவு-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.