கஹட்டோவட்டாவின் நீண்டகாலத் தேவையாகவுள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப் படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

2015 ஆம் ஆண்டு இந்த அரசில் நீர் வழங்கல் அமைச்சராக நியமனம் பெற்ற SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் எமது குடிநீர் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு SLMC KAHATOWITA BRANCH சார்பாக மாகாண சபை வேட்பாளர் அல்ஹாஜ் முஸ்தாக் அவர்களால் வேண்டுகோள் விடுக்கப் பட்டது. அதன்படி அமைச்சரால் நீர்வழங்கல் சபைத் தலைவருக்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது. அதற்கேற்ப தொடர்ந்தும் முஸ்தாக் ஹாஜி உட்பட ஏனைய சகோதரர்களின் தொடர் முயற்சி காரணமாக கடவத்தை நீர்வழங்கல் காரியாய அதிகாரிகள் பல முறை வருகை தந்து ஆய்வுகளை செய்த பின் பிரதான பாதையூடாகச் செல்லும் நீர்க்குழாயின் ஊடாக நீரைப் பெறுவது சாத்தியமில்லாததால் ஏற்கனவே செயலிலந்திருந்த அல் அமானா மற்றும் அல் அக்ஸா நீர் வினியோகத்தை மீள செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. 

அதன்படி கடவத்தை பொறியியலாளர்களால் 23 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப் பட்டது. அதன் பின்னர் நிதி ஒதுக்கீடு செய்வதற்காக பல முறை அமைச்சரை சந்தித்த போதிலும், நீர்வழங்கல் சபை அதிகாரிளால் கரஸ்னாகலை கம்பஹா நீர்வினியோகத் திட்டம் 25000 மில்லியன் செலவில் ஓரிரு வருடங்களில் நிறைவு செய்யப் படவுள்ளதால் 23 மில்லியன் செலவு செய்ய தயக்கம் காட்டியதால் தொடர்ந்து தாமதமானது. எனினும் தொடர்ந்து நாம் அமைச்சரிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2018ஆம் ஆண்டு அல் அமானா நீர் வினியோகத் திட்டத்தை ஆழ்கிணறு அமைத்து மறுசீரைமப்பதற்காக 18 மில்லியன் ஒதுக்கப்பட்டு ஆழ்கிணறு அமைப்பதற்குரிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது குரவலான பிரதேச மக்களால் பாரிய எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவரின் உத்தரவினால் நிறுத்தப் பட்டது. 

தொடர்ந்து இத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சி செய்தபோதிலும் அம்முயற்சிகள் கைகூடவில்லை. இது பற்றி அமைச்சரிடம் தொடர்ந்தும் முறையிட்டதற்கமைய 2019 ஆண்டு 5 கட்டங்களாக நடைமுறைப் படுத்தப் படவுள்ள கரஸ்னாகல நீர் வினியோத் திட்டத்தின் முதற் கட்டத்திற்குள் எமது ஊரும் உள்வாங்கப்பட்டு வேலைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் ஆரம்பம் முதல் முஸ்தாக் ஹாஜி,வபா ஹாஜி, சகோ ஸரூக் உட்பட சகோதரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதோடு மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்கள் அமைச்சரோடும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரோடும் நீர்வழங்கல் சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் பல முறை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அல்ஹாஜ் ஜவ்ஸி
உயர்பீட உறுப்பினர்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.