ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் இன்று (26) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இதுவரை பெயரிடப்படவில்லை எனவும், இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தின் பின்னரே அது குறித்து அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இன்று நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் மிக முக்கியதுவமிக்கதாக கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.