அரசாங்கத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் ´ஒன்லைன்´ முறையில் மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

நாம் தொழிநுட்பத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். அப்போது நேரம் மற்றும் பணத்தை சேமித்துக் கொள்ள முடியும். அரச இயந்திரத்தில் தற்போது ஊழியர் மிகை காணப்படுகிறது. 350,000 அரச ஊழியர்களை கொண்டு அனைத்து அரச நிறுவனங்களையும் செயற்படுத்த முடியும். 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ நாட்டினை பொறுப்பேட்கும் போது 5 இலட்சத்துக்கும் அதிகமாக அரச ஊழியர்கள் காணப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.