ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்ட யோசனையை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (26) பிற்பகல் 3.00 மணி அளவில் கூடியது.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை சில நிபந்தனைகளின் கீழ் நியமிக்க பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.