இலங்கைக்கு வருகை தந்துள்ள சௌதி அரேபியாவின் சபாநாயகர் அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹீம் அஷ்ஷெய்க் குழுவினரை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சௌதியில் உள்ள இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புக்களை விரிவுபடுத்தவும் திறமையான முயற்சியாளர்களை அந்நாட்டிற்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் சபாநாயகர், சௌதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(அத தெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.