ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தனக்கு எதிராக அல்ல எனவும், சுதந்திர கட்சியை வீழ்ச்சியடைய செய்தவர்களுக்கு எதிராகவே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியிலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு எதிராக நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாபா, எஸ்.பீ. திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.