சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதேசத்தில் மினி வைத்தியசாலையொன்று அமைக்கப்படவிருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும். துரதிஷ்டவசமாக, அதற்கான அமைவிடத்திற்குரிய காணியைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டமையினால் குறித்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

தற்போது, குறித்த நிதியொதுக்கீட்டினை கஹட்டோவிட்ட பிரதேசத்திலுள்ள பழைய கிளினிக் கட்டிடத்தை விஸ்தரிப்பதற்காகப் பயன்படுத்துவதற்கு வைத்தியசாலை திட்டமிடல் குழு முடிவெடுத்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய பொறியியலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நாளைய தினம் (09) காலை 9.30 மணியளவில் வருகை தரவுள்ளனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.