வாப்பாவின் நினைவு வரும்போதெல்லாம்
மனம் கணத்து...
கண்ணீர் நிரம்பி வழியும்.
“நியதி” என ஏற்றுக் கொள் என
மனம் என்னைத் தேற்றிக் கொள்ளும்.
அல்லாஹ்வின் சிந்தனை
நல்வழிக்கு ஆற்றுப்படுத்தும் மேலும் மருந்தாகவிருக்கும்
இருந்தாலும்... இருந்தாலும்.. இந்தக்
காட்டாறு மனம்
அணைகளெல்லாம் உடைத்துக் கொண்டு
கண்ணீராய் நிரம்பி வழியும்..
மெய்யாக மரணத்தின் வலி கொடியது...

Shifan Kamal

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.