ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றிலும் இனவாத குழுவினர் உள்ளமை காரணமாகவு ஜனாதிபதி தேர்தலில் தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறான காரணத்தினாலேயே, தான் புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(தமிழ் மிரர்)
கருத்துரையிடுக