நாளை (04) அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துரையிடுக