( ஐ. ஏ. காதிர் கான் )

   இலங்கை தேர்தல் வரலாற்றில், முதல் முறையாக சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையை, பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு   முன்னெடுத்துள்ளது.

   சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்காக இரு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக,  அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்களை  வெளியிட்டு,  மக்களைப் பிழையாக வழி நடத்தல் மற்றும் குழப்பங்களை  ஏற்படுத்தும்  நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

   இவ்வாறு தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   தேர்தல் ஆணைக்குழு ஊடாக, இலங்கை பேஸ்புக் அதிகாரிகளுக்கு  அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.