ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

´உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு´ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பின்னிணைப்பு - 10.10 am) ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலில் சர்வமத தலைவர்களிடம் கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவிடமும் கையளிக்கப்பட்டது.

Adaderana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.