நாட்டை பாதுகாப்பதற்கான இறுதி முயற்சியாக அனைவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மஹியங்கன பகுதியில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நடுத்தெருவிலேயே இருப்பதாகவும் அவ்வாறு நடுத் தெருவில் போக்குவரத்து பொலிஸாரே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் போக்குவரத்து பொலிஸாரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இல்லை எனவும் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எனவும் தெரிவித்த அவர், சஜித் பிரேமதாச விடியும் வரையில் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் இரவு நேர காவலர்கள் எமக்கு தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக சஜித் பிரேமதாச ஜில் போல் மாத்திரமே விளையாடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.