இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் துணைவியார் ஜீ. லத்தீபா பேகம் (வயது 72) இன்று (30.10.2019) புதன்கிழமை பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் காலமானார்.

அன்னாரது ஜனாஸா காஜா நகர் திருச்சி காயிதே மில்லத் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நல்லடக்கம் நாளை (31.10.2019) வியாழக்கிழமை பகல் 1 மணி அளவில் திருச்சி காஜாமலை மஸ்ஜிதே ஹு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது ஜனாஸா தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.