(Jesmin Media Unit)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய குருநாகல் மாவட்ட தலைவரும், முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினருமாகிய உயர் நீதி மன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் வழிகாட்டலின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய தேர்தல் தொகுதியில், கொல்லனதலுவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த ஒலிபெருக்கி வசதியினை இன்று ஊடகவியலாளர் M.H.M.JESMIN செய்து கொடுத்தார்.
அல்ஹம்துலில்லாஹ்! பாடசாலையின் அதிபர் நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , ஆசான்கள், பெற்றோர்கள், தாய்மார்கள் ,நலன்விரும்பிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.