அநுரகுமார திஸாநாயக்கவை இம்ரான் கானுடன் ஒப்பிட்டு ரைட்டப் எழுதி கோஷம் போட்ட வீர வரலாற்றை இந்தத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.அப்போது எழுதி இருக்க வேண்டிய பதிவு.ஆனால் அதைக் கேட்கும் தோரணையில் யாரும் இங்கே இருக்கவில்லை.ஒருவர் அநுர வெல்வாரா என்று மெஸேஜ் அனுப்பி கிலியூட்டினார்.இன்னும் சிலர் மும்முனைப் போட்டி என்று கூசாமல் சொல்லிக் கொண்டு திரிந்தனர்..

விசயம் இதுதான்...

இம்ரான்கானின் பாகிஸ்தானில் 96 வீதமானவர்கள் முஸ்லிம்கள்.இரண்டு வீதம் இந்துக்கள்.மிச்சப் பேர் கிறிஸ்தவ, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்கள்.மாறி மாறி ஆட்சி செய்தது எல்லாம் நவாஸ் செரீபும் பூட்டோவும்.இடையில்.இருவருக்கும் போரடித்ததால் கொஞ்சம் முஷாரப் ஆண்டார்.

அங்கே நவாஸுக்கோ பூட்டோக்கோ முஷாரபுக்கோ இனவாதம் பேச வேண்டிய தேவை இல்லை."பார் இந்துக்கள் அடுத்த பத்து வருடத்தில் பல்கிப் பெருகிக் குட்டி போடப் போகிறார்கள்.இந்தியாவின் ஆளும் பீ ஜே பி அரசின் துணையுடன் பாகிஸ்தானைக் கைப்பற்றிவிடுவார்கள்" போன்ற கோஷங்கள் எதுவும் அங்கே இல்லவே இல்லை.மாறி மாறி ஊழல் செய்து யாராவது களைத்துப் போய் ரெஸ்ட் எடுக்கும் போது இன்னொருவர் வருவார்.இந்தப் பித்தலாட்டத்தை மாற்ற வெறுத்துப் போன மக்கள் இம்ரான்கானை தேர்வு செய்தனர்.

ஆனால் இங்கே எழுபத்து நான்கு வீதம் சிங்களவர்கள்.மிச்சம் இருபத்தாறும் சிறுபான்மையினர்.இனி என்ன மக்களைப் பிரித்து அரசியல் செய்ய சொல்லவும் வேண்டுமா.தமிழர்களிடத்தில் முஸ்லிம் உன் எதிரி என்பார்கள்.முஸ்லிம்களிடத்தில் தமிழனோடு வாழவே முடியாது என்பார்கள்.சிங்களவர்களிடத்தில் "ஐயோ என் நாடு,என் மதம், என் கர்பப்பை எல்லாமே எங்களை விட்டும் போகப் போகிறது.வீறு கொண்டு எழுந்து வாருங்கள் " என்பார்கள்.

இனி யார் அநுரகுமாரவின் எழுச்சிப் பேருரைகளைக் கேட்பது.நாட்டைக் காப்பாற்ற அவர்களும் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சிறுபான்மையும் முட்டி மோதத் தொடங்கிவிடும்.அநுரகுமார போன்ற ஒருவர் இங்கே சாத்தியமாக பாகிஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையாய் முஸ்லிம்கள் இருப்பதைப் போல 98 வீதத்தில் அல்லது நூறு வீதத்தில் பெளத்தர்கள் இருக்க வேண்டும்.அப்போது நாடு பிடிக்க தமிழனோ முஸ்லிமோ வரும் கதைகள் செல்லுபடியாகாது.அநுர போன்ற அப்பழுக்கில்லாத அரசியல்வாதி மிளிர்வார்..இங்கே அப்படி ஒரு நிலமை இல்லாததால் அநுரகுமார திஸாநாயக்க என்றைக்குமே சாத்தியம் இல்லை....

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.