இன்று நடைபெறும் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தேர்தல்.

இத்தேர்தலில் சிறுபான்மை மக்களுடைய வாக்காளிப்பது விதத்தை குறைப்பற்காக இவ்வாறான அராஜத்தின் மூலம் எம்மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த முனைகின்றார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் உதவியினால் எவ்வித உயிர் சேதங்களின்று எம்மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்துக்கு செட்டிக்குளம் பொலீஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மக்கள் மன்னாருக்கு பாதுகாப்பாக அனுப்பபட்டனர்.

 மேலும் பயணம் மேற்கொண்ட  பஸ்கள் மீதும் துப்பாக்கி பிரயோகங்களாலும் கற்களாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து பயணித்த பஸ்களை வழிமறிக்கும் செயற்பாடாக பாரிய மரங்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் இச்சம்பவம் குறித்து உடனடியாக  பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்பாரூக் அவர்கள் செட்டிக்குளம் பொலீஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பாதையுனுடாக பயணிக்கும்  மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டியதுடன் செட்டிக்குளம் பொலீஸ் நிலையத்துக்கு அதிகாலை 1.00 மணியளவில் நேரடி விஜயம் மேற்கொண்டு இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் படுத்தியதுடன் சம்பவம் தொடர்பாக  மக்களின் அச்சநிலை தொடர்பாகவும் அப்பாதையினால் பயணிக்கும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் இப்பாதையினால் பயணம் மேற்கொள்ளும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிபடையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்  எம்மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின்முன் தாண்டிக்கப்படவேண்டும் எனவும் குழப்பங்களை ஏற்படுத்தி  ஆட்சியை  பிடிக்கவேண்டும் என துடிக்கும் இனவாத தலைவர்களுக்கு மக்கள் தகுந்த படம் இன்று கற்பிக்க ஒன்றிணைய வேண்டும்.

மேலும் எம்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இச்செயலை வண்மையாக கண்டிப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்பாரூக் தெரிவித்தார்.







ஊடகப்பிரிவு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.