புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவு வழங்குவதாக கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது அன்னச் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேதமதாசவிற்கு ஆதரவை வழங்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவ கட்சியாக இருப்பதால் ஏனைய இரு கட்சிகளினது தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தன் ஜயா மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.