தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்  புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சசாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று (13) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது.
இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு  உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
-பாறுக் ஷிஹான்
(தமிழ் மிரர் இணையம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.