( மினுவாங்கொடை நிருபர் )

   அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களையும், 4 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.

   எதிர்வரும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டுப்பணம் தொடர்பான திருத்தங்கள் குறித்தும்,  இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

   இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதே, இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.