தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
கடந்த 27ஆம் திகதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில்  4 பேர் கைது செய்யப்பட்டனர். 
விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். 
அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. 
மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.