ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE யின் ) 48 வது தேசிய தினம் நேற்று (02.12) இரவு கொழும்பில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டதோடு இலங்கை பாராளுமன்றத்தின்  சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் எமது கஹடோவிடையின் மைந்தனும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சியனே மீடியா சேர்கில் தலைவருமான அல்ஹாஜ் M.Z. அஹமட் முனவ்வர் (J.P) முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மஷுர் மௌலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் அல்ஹாஜ் N.M.அமீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

(நாஸர் JP)






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.