இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய மக்கள், இப்போது வித்தியாசமான ஒரு போராட்ட அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.
போராட்ட விவகாரங்களில் விதவிதமான யுத்திகளை யோசித்து கையாளக்கூடியவர்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உலகமே இதைப் பார்த்து வியந்தது.




Men opposing citizenship Amendment Act and nrc, using Rangoli


இப்போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் கையில் எடுத்துள்ள ஒரு வித்தியாசமான போராட்ட வடிவம் கோலம் இடுதல்.
கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள் என்று எழுதுவதைப் போல, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றெல்லாம் எழுதி தேசிய அளவில் உள்ள ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர், போராட்டக்காரர்கள். எனவேதான், காவல்துறையினர் இதுபோன்ற கோலங்களுக்கு தடை விதித்து தடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

(One India)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.