ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர்களை இன்று (03) சந்தித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில், பௌத்த தலைமைப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை முதன்முறையாக சந்தித்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதையும் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக்கொண்டார்.
மகாநாயக்கத் தேரர்களுடனான சந்திப்பினை பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
TM
கருத்துரையிடுக