-NFGG ஊடகப் பிரிவு-

பாராளுமன்றத் தேர்தல், 2020 ஏப்ரல் இறுதிப் பகுதியில் நடைபெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்கமைய அரசியல் கட்சிகள் அதற்குத் தயாராகி வருகின்றன.

இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய செயற்குழு, சென்ற ஞாயிறன்று (07.12.2020) காத்தான்குடியில் ஒன்று கூடியது.

தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள், போட்டியிட உத்தேசிக்கும் மாவட்டங்கள், ஜனாதிபதித் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடங்கள், பெற்றுக் கொண்ட அனுபவங்கள், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தல், தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) இடம்பெற்ற கலந்துரையாடல்கள் ஆகியன தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இது முதற்கட்ட கலந்துரையாடலாகவே இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.