தான் பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

நேற்று (09) கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஏனைய அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், தனக்கு எவ்வித வருத்தம் இல்லை என தெரிவித்தார்.

அதேபோல், பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது மக்கள் சேவை போன்று ஏனைய அரசியல் நடவடிக்கைகள் அப்படியே தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தான் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்றும், அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.