கைது செய்யப்பட்ட மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் இந்திக அத்தநாயக்கவால் இந்த உத்தரவு இன்று (09) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணை அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் இன்று முற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

AdaDerana.lk

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.