கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்





கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நாளை (18) முற்பகல் 9.00 மணி தொடக்கம் 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைச் செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளை முற்பகல் 09.00 மணி தொடக்கம் ஞாயிறு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ , கோட்​டை, கடுவலை ஆகிய மாநகர சபை அதிகாரப் பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கம, கொலொன்னாவை, நகர சபை அதிகாரப் பிரதேசங்கள், கொடிகாவத்தை, முல்லேரியாவ ஆகிய பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்கள் மற்றும் ரத்மலானை, சொய்சாபுர மாடி வீடு ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

-அத தெரண-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.