அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் மூவரினதும் சடலங்கள் நேற்று பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சடலங்கள் கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குசொந்தமான விமானத்தில் இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

டோகா மற்றும் தெஹ்ரானிலுள்ளஇலங்கை தூதுவராலயங்கள் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டன..

இதற்கானசெலவுகளை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது.

அஸர்பைஜானில்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவிகள், தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் கடந்த ஒன்பதாம் திகதி மாணவிகள் மூவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.