ரயில் சாரதிப் பாடசாலையொன்று இரத்மலானையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வாறான பாடசாலையொன்றின்; தேவை இருப்பதாக ரெயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அலுவலக ரெயில் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்தல், ரெயில் இடைமாறல் இடங்களின் எண்ணிக்கை என்பவற்றை அதிகரித்தல் மற்றும் பிரதான பாதையிலான சேவைகளைக் கூடுதலாக மேற்கொள்ளல் உள்ளிட்ட ரெயில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ரெயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க கூறினார்.

கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ரெயில் எஞ்சின்கள் நாட்டிலுள்ள ரெயில் பாதைகளில் சேவையில் ஈடுபடுத்த முடியாது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.