( ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

சிங்கள பௌத்த வாக்குகள் பெருவாரியாக கிடைக்காதது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும்
சிறுபான்மை வாக்குகள் குறிப்பிட்டளவு கிடைக்காமை தொடர்பாக ஜனா திபதியும் சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்று
கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்று கையில், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு சிங்கள மக்களின் பெரும்பான்மையாக கிடைக்கவேண்டியிருந்த வாக்குகள் ஏன் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி திரும்பிப்பார்க்க வேண்டும்.

 அதேபோல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு
குறிப்பிடத்தக்க சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காமை தொடர்பாகவும் சுயவிசாரணை செய்யப்படவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை அடிப்படை வாதிகளாக சுட்டிக்காட்ட முற்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஸ்திரமற்ற அரசுகள் உருவாவதை தடுக்க விகிதா சார தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் எண்ணிக்கையில் சிறிய வேறுபாடுகள் ஏற்படும்போது இணக்கப்பாட்டு அரசுகள் உருவாவது பாதகமானவையல்ல.

அதே வேளை அதி பெரும்பான்மையுடன் அமைக் கப்பட்ட அரசுகளால் நாட்டுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதையும் மறக்க முடியாது. நானும் தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்காரவும் ஒரே அமைச்சரவையில் இருக்கும்போது, அன்று தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதை தடுப் பதற்கு நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தோம். ஆனால் அந்த பிரச்சினை மீண்டும் தலைதூக்க ஆரம்பித் துள்ளதாகவே தெரிகின்றது.

இனவாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை நிராகரிக்க வேண்டுமென ஜனாதிபதி உரையில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி உரையின் உள்ளடக்கத்தின் உண்மையான விடயங்களை செயற்படுத் துவதற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். அதேநேரம் ஒரு கட்சியின் பெயரில் தனது இனத்தின் பெயர் இருப்பதன் மூலம் அந்தக் கட்சி இனவாதக் கட்சி என தெரிவிக்க முற் படுமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிங்களம் மாத்திரம் நிலைப்பாட்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநா யக்க கட்சி உருவாக்கி வெற்றி பெற்றார். சிங்களம் மட்டும் என்ற பிரசாரம் விகாரை தோறும் அன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் வாறு மேற்கொள்ளப்பட்டது மொழியின் மீது இருந்த ஆர்வத்திலா? அல்லது அதி காரம் மீது இருந்த மோகத்திலா? என்பது வரலாற்றை திருப்பிப் பார்ப்பவர்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் மீண்டும் கடந்த காலத்துக்கு செல்ல வேண்டியதில்லை.

சிங்கள பௌத்த மக்களின் வாக்கு களால் வெற்றிபெறும் நிலை ஏற்பட் டது என ஜனாதிபதி தெரிவித்த கருத்து உண்மையாகும்.
அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று இனவாத அரசியலுக்கு இடமளிக்க வேண் டாமென கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி கோரியிருந்தார்.

ஆனாலும் எந்த அரசியல் கொள்கையை பெரும்பான்மை சிங்கள மக்கள் மீது பிரசாரம் செய்து ஜனாதிபதி வெற்றிபெற்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.