வடமாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ​நேற்று (27) வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கிவைத்தார்.

இந்த நிதியுதவியினை பத்தரமுல்லையிலுள்ள வடமாகாண ஆளுநர் உப அலுவகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையாக காலத்தில் எமது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் தமிழ் மக்களும் அன்றாட உணவுப்பொருட்களுக்கும் மற்றும் நாளாந்தம் தொழிலுக்கு செல்லும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காகவும்  பெருமளவு சிரமப்பட்டுகின்றனர்.

அதன் காரணமாக தமது கிரிக்கெட் நண்பர்களின் மூலமாக இந்த பணம் சேகரிக்கப்பட்டு இந்த நிதியினை கையளித்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்ததாக வடமாகாண ஆளுநர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டன.

- ரமணன் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.