மேலும் 4 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள், ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக சுகாதார அமைச்சிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கொடையிலுள்ள ஐ.டி.எச் இன் தீவிர சிகிச்சைப் பிரிசில் தற்போது 3 கோவிட் -19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 36 மணி நேரத்தில் இலங்கை எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளியும் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை மொத்தம் 102 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கருத்துரையிடுக