நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சாதாரண நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றுவதில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். 

மேலும் கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதிர்வரும் நாட்களில் பல புதிய சட்ட விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸினை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தயாரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் விசேட வைத்தியர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.