இலங்கையில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் ஏற்கனவே கண்டி, குண்டசாலை பிரதேச தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர்கள் என்று தெரிய வருகிறது.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.