நிந்தவூரில் காடைத்தனம்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் ஆதரவாளர்கள் மீது இன்று (26) காடைத்தனம் ஏவி விடப்பட்டிருக்கிறது. கைகலப்பாக உருவெடுத்த இக்காடைத்தனத்தினால் காயமுற்ற பைசால் காசிமின் ஆதரவாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்றைய கூட்டத்தொடருக்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த பைசால் காசிம் அவர்களின் தொண்டர்களை திடீர் என வெள்ளை வேனிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்த கும்பலொன்று அங்கிருந்த காட்சிப் பலகைகளை கிழித்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த சிலரின் தொலைபேசிகளை பறித்து கூரிய ஆயுதங்களால் தாக்கி இருக்கின்றனர்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.