நாளை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில் , அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர் இம்முறை தேர்தலில் ஒரு கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை இன்று (04) இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் 71 மத்திய நிலையங்களுக்கு இந்தப் பெட்டிகள் வழங்கப்படும். அந்த மத்திய நிலையங்களிலிருந்து நாளை காலை எட்டு மணி முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.

வாக்காளர்களின் அனைவரினதும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் , Capture drrrrrrrrrrrrதனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேர்தல் தினத்தில் பிற்பகல் 4 மணி முதல் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்..

பொதுத் தேர்தலுக்காக எட்டாயிரம் சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்;. சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதால் வாக்களிப்பு நிலையங்களில் கொவிட்-19 வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை. வாக்களிப்பு நிலையங்களுக்கு முழுமையான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவத் தளபதியால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களைப் பெற்று பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.