சர்ச்சைக்குரிய ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை பொலிஸார் மீளபெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.