மக்களுக்கு சேவையாற்றுவது கொண்டே மக்கள் மனதுகளை வென்றெடுக்க வேண்டும். புதிதாக அத்தனகல்ல தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கௌரவ முன்னால் மாகாண சபை உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ அவர்கள் தெரிவிப்பு.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அத்தனகல்ல தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய உபுல் மகேந்திர ராஜபக்ஷ அவர்களை கஹட்டோவிட்டாவில் இருந்து அவரை ஆதரித்து வாக்களித்தவர்களும் இம்முறை பொதுஜன பெறமுன கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களும் ஊரின் பொதுஜன பெரமுன கட்சி பிரதிநிதிகளும் ஊர்மக்களும் நேற்றைய தினமிரவு (07) அவர்களது வீட்டுக்கு போய் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன் ஊரின் அபிவிருத்தி பணிகளுக்கும் தம்மாலான பங்களிப்புக்களையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கஹட்டோவிட்ட ஓகடபொல உடுகொடை திஹாரிய ஊர்களில் இருந்தும் தமக்கு இம்முறை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்ட கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ அவர்கள் தன்னிடம் எதுவித பேதங்களோ பாரபட்சங்களோ இல்லை எனவும் கடந்த காலங்களில் சிலர் எம்மிடம் வேலைகளை எடுத்து விட்டு எமக்கு எவ்வித ஆதரவும் தராமல் இருந்ததுவே வருத்தமளித்ததாகவும் எனினும் இம்முறை ஊரின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த கட்சியின் அங்கத்தவர்களை இணைத்து அதற்காக ஒரு குழுவினரை கிளை சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

 அதனூடாக ஊரின் வேலைகளை விண்ணப்பிக்கும் பட்சத்தில் தன்னால் முடிந்த அபிவிருத்தி வேலைகளை செய்து தருவதாகவும் கூறியதோடு வாக்களித்த வாக்களிக்காத மக்கள் என்ற வேறுபாடின்றி ஊருக்கும் தொகுதிக்கும் தேவையான அபிவிருத்தி பணிகளை செய்து கொடுக்க தாம் எப்போதும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஆரம்பத்தில் தான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோதிலும் மக்களின் தேவைகளையும் அபிவிருத்தி வேலைகளையும் தொடராக மக்களுக்கு செய்து கொடுத்து அவர்களின் மனங்களை வென்றெடுத்த காரணமாகவே இன்று மக்களால் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்துள்ளதாகவும் இதனால் மக்களுக்கு சேவையாற்றுவது கொண்டே மக்களை வெல்லவேண்டும் எனவும் தனது தேர்தல் வெற்றி குறித்து மிகவும் நன்றியுணர்வுடன் கருத்துக்களை முன்வைத்தார்.

நேற்றைய தினம் அவரை சந்திக்க சென்றபோதான படங்களை காணலாம்.

(LUTHUFULLAH)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.