20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபினை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (03) வௌியிடப்படும் என அரசாங்க அச்சக பிரிவின் அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நேற்றைய தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.