انا لله وانا اليه راجعون

காத்தான்குடியை பிறப்பிடமாகவும், திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அல்ஹாஜ் A.C.M.மக்கீன் (ஷர்கி) திஹாரியில் காலமானார்.

அன்னார் கபே அமைப்பின் (CaFFE) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் அவர்களின் தந்தையும் ஆவார். மக்கீன் ஹஸ்ரத் திஹாரியில் காலமானார். 

அன்னார் 1990 முதல் கடந்த ஆண்டு வரை அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் பரீட்சை பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கையின் பல இடங்களில் பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றியுள்ளதுடன் திஹாரிய அல்-அஸ்ஹர் அஹதிய்யா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நான்கு மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.