இலங்கையில் திவுலபிடிய கொத்தணியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்தும் 56 பேர் சமூகத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய தினம் (21) இதுவரை 166 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் திவுலபிடிய கொத்தணியில் இதுவரை 2508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.