நேற்று (22) அடையாளம் காணப்பட்ட 147 கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று மொத்தமாக 309 பேர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களில் 188 பேர் பெலியகொட மீன் விற்பனை மத்திய நிலையத்துடன் தொடர்புடையவர்களாவர்.

பெலியகொட மீன் விற்பனை மத்திய நிலையத்துடன் இணைந்தாக கொழும்பில் பதிவான தொற்றாளர்கள் சம்பந்தமான விபரம்...

கொழும்பு – 79

கடுவெல – 06

தெமட்டகொட் - 15

மொறட்டுவ – 03

கொட்டாஞ்சேனை – 04

வெல்லப்பிட்டியவில் - 09 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.


இதேவேளை, நேற்று மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள்.

கொழும்பு – 14

கொட்டாஞ்சேனை – 07

முல்லேரியாவ – 04

கிரேண்பாஸ் - 04

புளுமெண்டல் - 01

தெஹிவளை – 01


கம்பஹா மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள்

கம்பஹா – 08

வத்தளை – 02

ராகம – 01

மினுவாங்கொட – 14

திவுலப்பிட்டிய – 05

கட்டுநாயக்க – 10

காலி மாவட்டத்தில் அவுங்கலையில் 8 பேரும், இந்துரவ பகுதியில் ஒருவரும், மாத்தறையில் ஒருவரும், குளியாபிட்டியில் 14 பேரும், அநுராதபுரத்தில் இருவர் தொற்றுக்குள்ளனதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

AdaDerana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.