இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் நேற்றைய தினம் (23) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தெற்கு களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 579 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,960 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துரையிடுக