இன்று (07) மேலும் 377 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 294 பேர் பேலியகொடை கொத்தணியில் இருந்தும் 83 பேர் சிறைச்சாலை கொத்தணியில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இதுவரை 703 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 25,025 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துரையிடுக