இலங்கையில் நடைமுறையில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக  நேற்று முன் தினம் (12) லண்டனில் இருக்கும் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக சுமார் நான்கு மணி நேரமாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ சமூக பிரதிநிதியும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இதன் போது, இலங்கை அரசாங்கம் உடனடியாக ஜனாஸா எரிப்பை நிறுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என கோசமிடப்பட்டிருந்தது.

சோனகர்.கொம்மில் ஒளிபரப்பான நேரலையை இங்கு காணலாம்:

(நன்றி - சோனகர்.கொம்)










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.