இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை வீரர் அகில தனஞ்சய தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவ செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனது கன்னி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடிய பெதும் நிஷங்க 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

மேலும் மேற்கிந்திய தீவுகளின் கே.பொலார்ட் அகில தனஞ்சய வீசிய ஒரே ஓவரின் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.