இன்றிரவு (11) 10 மணி வரை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், காலி, மாத்தறை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் இருக்கும் எனவும் சில பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி ஏற்படும் எனவும் வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இடையில் பலத்த காற்று வீசும் எனவும் பொதுமக்களுக்கு அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.