அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அத்தியாவசியப் பொருட்களின் விலையை விரைவில் குறைப்பதே தனது முதல் குறிக்கோள் என்றும் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கையை விடுத்தார்.

ஒரு கிலோ அரிசியைக் கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் பட்டினியில் உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர். முதலில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். 

-தமிழ் மிரர்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.